badge

Sunday, January 24, 2016

கவிதை by சிவக்குமார் சூலூர்

A Guest Post by சிவக்குமார் சூலூர்

குழந்தை கவிதை:

பூக்கள் அழகென்று கவிதை எழுதினேன் ; இன்று அப்பூக்களே தோற்றது நீ பூத்த புன்னகையால்

~~~~$$$~~~~

நீ உறங்கும் அழகினிலே நான் உறங்க மறந்தேன்

~~~~$$$~~~~

கலப்படமில்லா உன் சிரிப்பினிலே நான் கரைந்து போனேன்

~~~~$$$~~~~


உன்னை பற்றி கவிதை எழுத நானும் குழந்தையாகிறேன்

~~~~$$$~~~~


தொட்டிலில் உறங்கும் எனது கவிதை நீ

~~~~$$$~~~~


வீட்டினுள் வானவில் உன் சிரப்பினிலே

~~~~$$$~~~~


தலைகுனிந்தேன் உன்னை முத்தமிட தலைநிமிர்ந்தேன் உன் தந்தையாக

~~~~$$$~~~~


கவிதை எழுத மனமில்லை கவிதையாய் நீ இருக்க.

~~~~$$$~~~~

1 comment: